அவருக்குப் பிடித்த உணவு
அவருக்குப் பிடித்த உடை
அவருக்குப் பிடித்த நிறம்
அவருக்குப் பிடித்த மனிதர்கள்
என நீளும் பட்டியல்
அனுசரித்துப் போ என்ற
அம்மாவின் அறிவுரை
என் பேச்சில் உடையில் நடையில்
உணர்வில் உறக்கத்தில்
நான் இல்லாத என்வாழ்க்கை
அகல கண் விழித்தபடி
அதல பாதளத்தில் விழும்
அபலை ஒருத்தியின் அழுகுரலன்றி
கலியாணம் பற்றிய கனவு
வேறு எதுவும் எனக்கில்லை..
த.ஜீவலக்ஷ்மி
பெண்சுயம்;வாழ்த்துகள்;தொடர்ந்து எழுதுங்கள்
பதிலளிநீக்குNandri thozhar!
பதிலளிநீக்குNandri thozhar!
பதிலளிநீக்கு